Sunday, October 23, 2011

நண்பனைத் தேடி - 6. இழப்பு

கதவைத் தள்ள முடியாததால் பதட்டத்தில் இருந்த விக்கியிடம், தன் கையில் இருந்த டார்ச்சைக் கொடுத்தான் கிச்சா. பின்னர் கதவிலிருந்து சில அடிகள் பின்னே சென்று, முட்டளவு தண்ணீரிலும் தன் பலம் முழூவதும் கொடுத்து ஓடி வந்து, கதவில் மோதினான். கதவு உடைந்து விழ, கிச்சாவும் கதவோடு சேர்ந்து போய் விழுந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த அருவியின் தண்ணீர், கதவோடு கிச்சாவையும் அடித்துச் சென்று கீழே தள்ளியது.

கதவு உடைந்த சத்தம் கேட்டு பார்த்த சுரேஷ், குகையின் மேலிருந்து நிரம்பி வழியும் தண்ணீரோடு கதவு விழ, கிச்சாவும் விழுவதைப் பார்த்தான்.

அருவி விழும் பள்ளத்திலிருந்து பிரிந்து செல்லும் தண்ணீரில், ஆறு போல் தண்ணீர் செல்லும் பாதை வழியாக கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது.

ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரமே ஏறி இருந்த சுரேஷ், கீழே இறங்கி வந்து அருவித் தண்ணீர் விழும் பள்ளத்தை நெருங்கி, உள்ளே குதித்தான்.

அடுத்த நொடி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் செல்ல, அவனைப் பிடிக்கலாம் என்று வெளியே வந்த விக்கியையும் தண்ணீர் அடித்துக் கீழே தள்ளியது. சுரேஷ் உள்ளே குதிக்கவும், அந்தப் பள்ளத்தில் வந்து விக்கி விழவும் சரியாக இருந்தது. நல்ல வேளையாக விக்கியையும் அடித்துச் செல்லாமல், சுரேஷ் பிடித்து இழுத்து பள்ளத்திற்கு வெளியே வந்து விட்டான்.

அந்த வேகமான தண்ணீரின் ஓட்டத்தில் விக்கியுடன் எதிர் நீச்சல் போட சுரேஷ் மிகவும் தடுமாறியே வந்து சேர்ந்தான். மறுபடியும் அந்த ஓட்டத்தில் சென்று கிச்சாவைக் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை சுரேஷிற்குத் துளி அளவும் இல்லை.

No comments:

Post a Comment