Tuesday, September 6, 2011

நண்பனைத் தேடி - 1. பயணம் ஆரம்பம்

ரோஸ்மேரி கலைக் கல்லூரியில்...

இளநிலை தாவரவியலில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களின் வகுப்பறை வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக இருந்தது. அதற்கு காரணம், எல்லோரும் இன்னும் ஒரு வாரத்தில் செல்ல இருக்கும் கல்வி சுற்றுலா பற்றி பேசிக் கொண்டு இருந்தது தான். பேராசிரியர் அன்புச்செல்வன் உள்ளே வரவும் அனைவரும் அமைதியாயினர். அரை மணி நேர வகுப்பிற்கு பின், அவர் சுற்றுலாவிற்கு யாரெல்லாம் வருவதாகக் கேட்டார். உடனே மாணவர்களில் ஒருவன் தங்கள் பெயர்கள் எழுதப்பட்ட பேப்பரை அவரிடம் தந்தான். மொத்தம் 45 பேர் கொண்ட வகுப்பில் 30 பேர் மட்டுமே பெயர் கொடுத்திருந்தனர். அதைப் பார்த்துவிட்டு, 10 மாணவிகள் மட்டுமே பெயர் கொடுத்திருந்ததால், இருவரையும் ஒன்றாக அழைத்துச் சென்று விடலாம் என முடிவு செய்தார்.

அந்த புளிய மரத்தடியில் எப்போதும் போல் மாலை கல்லூரி முடிந்த பின் அவர்கள் ஐந்து பேரும் சங்கமமாயிருந்தனர். அந்த அவர்கள்: கிச்சா என்ற கிருஷ்ணகுமார், விக்கி என்ற விக்கிரமாதித்தன், சுரேஷ், கிச்சாவின் தோழி அகிலா, விக்கியின் தோழி வளர்மதி.
சுற்றுலா நாட்கள் 10 என்பதால் அகிலா வீட்டில் முதலில் அனுமதிக்கவில்லை. தான் எவ்வாறு விளக்கி அவர்களை சம்மதிக்க வைத்தாள் என அகிலா கூறி சந்தோஷப்பட்டாள். சுரேஷோ சுற்றுலா செல்வதற்காகவே தான் சேர்த்து வைத்த பணத்தில் தான் வருவதாகவும், வீட்டில் கேட்டதற்கு தரவில்லை என்றும் கூறினான். இவ்வாறாக ஒவ்வொரு மரத்தடியிலும் சுற்றுலா பற்றிய பேச்சே இருந்தது. ஒரு மணி நேர அரட்டைக்கு பின் விடை பெற்று அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாமல் ஓடி விட்டது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) விடிந்தால், 5 மணிக்கு எல்லாம் பஸ் கிளம்பி விடும். வளர்மதிக்கு அதை நினைத்தே இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பின்னர் எப்படியோ தூங்கிப் போனவள், காலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள். தேவையான டிரஸ், மற்ற பொருட்களையெல்லாம் முந்தின நாளே பேகில் எடுத்து வைத்து விட்டாள்.

எல்லோரும் கரெக்டா 5 மணிக்கு கல்லூரியில் ஆஜராகியிருந்தனர். 40 மாணவ மாணவிகள், இரண்டு பேராசிரியைகள் மற்றும் ஒரு பேராசிரியரைக் கொண்ட சுற்றுலாக் குழு பஸ்ஸில் மேற்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி பயணம் செய்தது.

(தேடுதல் தொடரும்…)

No comments:

Post a Comment