Tuesday, September 6, 2011

நண்பனைத் தேடி - 2. செண்பகாதேவி அருவி


முதலில் குற்றாலம் சென்றனர். அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து அனைவரும் தங்கினர். பேராசிரியர் அன்பு, அனைவரையும் அழைத்து சில கண்டிஷன்ஸ் கூறினார், “அருவியில் குளிக்கவோ, ஷாப்பிங் பண்ணவோ, பாடம் சம்மந்தமாக தாவரங்கள் சேகரிக்கவோ யாரும் தனியாக செல்லக் கூடாது. முக்கியமாக மாணவிகள் பேராசிரியை துணை இல்லாமல் செல்லக் கூடாது. மாணவர்களும், குறைந்தது நான்கு பேராவது சேர்ந்துதான் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மாலை 6-7 மணிக்குள் ஹோட்டலுக்கு திரும்பி விட வேண்டும்.”

கொஞ்ச நேரம் விக்கியுடன் ஜாலியாக சுற்றலாம் என்று நினைத்த வளர்மதி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும், மனசுக்குள் பேராசிரியர் அன்புவை திட்டி தீர்த்தாள். வளரும் அகிலாவும் மற்றும் மூன்று மாணவிகளும், பேராசிரியை செல்வியுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர். மற்ற ஐந்து மாணவிகள் பேராசிரியை தேவிகாவுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர்.

விக்கி, கிச்சா மற்றும் சுரேஷ் கொஞ்ச நேரம் பேராசிரியை செல்வியுடன் செல்வதாக கூறி அவர்களுடன் சென்றனர். பின்னர் வளரும் அகிலாவும் பேசுவதாக தெரியவில்லை. எனவே மூவரும் அங்கிருந்து பிரிந்து தனியாக சுற்றச் சென்றனர்.

அங்கு இருக்கிறதிலியே உயரமா இருக்கிற அருவியில போய் குளிக்கலாம் என விக்கி ஐடியா கொடுக்க, மூவருமாக செண்பகாதேவி அருவிக்கு முதலில் சென்றனர். அங்கிருந்து பார்க்க இன்னும் உயரத்தில் ஒரு அருவி இருந்ததற்கான தடயம் இருக்க, அதிலிருந்து தண்ணீர் வரவில்லை. எனவே அதைப் பற்றி அங்கிருந்த ஒரு பழ வியாபாரியிடம் விசாரித்தனர்.

No comments:

Post a Comment